1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 31 ஜூலை 2023 (08:58 IST)

விரைவு ரயிலில் துப்பாக்கிச்சூடு.. 3 பயணிகள் உயிரிழப்பு.. ஆர்.பி.எஃப் வீரர் கைது..!

விரைவு ரயிலில் ஆர்பிஎஃப் வீரர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் மூன்று பயணிகள் உயிரிழந்த நிலையில் அந்த வீரர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்ற ஜெய்ப்பூர் விரைவு ரயிலில்  பயணம் செய்த ஆர்பிஎஃப் வீரர் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த ரயில் மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் என்ற ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோதுதான் இந்த துப்பாக்கி சூடு நடந்ததாக தெரிகிறது. துப்பாக்கியால் சுட்டதில் ஆர்பிஎப் காவலர் மற்றும் 3 பயணிகள் உயிரிழந்ததாகவும் துப்பாக்கியால் சுட்டு விட்டு கீழே குதித்து தப்ப முயன்ற ஆர்பிஎஃப் வீரர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த சம்பவம் அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva