வியாழன், 19 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (12:09 IST)

தீ பிடித்து எரிந்த ரயில்: பயணிகளின் நிலை என்ன??

தீ பிடித்து எரிந்த ரயில்: பயணிகளின் நிலை என்ன??
ஹரியானாவில் புது டெல்லி வரை செல்லும் ரயில் ஒன்று தீ பிடித்து எரிந்தது.

ஹரியானா மாநிலம் அசாவொதி ரயில் நிலையத்தில், ஹைதராபாத்திலிருந்து டெல்லி வரை செல்லும் தெலுங்கானா எகஸ்பிரஸில் இரண்டு பெட்டிகள், திடீரென இன்று காலை 7.45 மணியளவில் தீ பிடித்து எரிந்தது.

இதனை கண்ட ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். அதில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டனர். பின்பு உடனடியாக வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டன. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவருகிறது.