1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (09:40 IST)

300 நாள்களை கடந்தாச்சு.. 27ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் போராட்டம்

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் 300 நாள்களை கடந்துள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு நாடு முழுவதும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து அனைத்து மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தை துவங்கினர். இந்த போராட்டத்தின் போது கலவரமும் வெடித்தது. 
 
இருப்பினும் விவசாயிகள் டெல்லியில் மேற்கொண்டுள்ள போராட்டம் நேற்றுடன் 300 நாள்களை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கை தெளிவாக தெரிந்தாலும் மத்திய அரசு அவற்றை ஏற்க மறுப்பதால் வரும் 27 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த இருப்பதாகவும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.