வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 23 ஏப்ரல் 2020 (18:10 IST)

ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தது ரூ.7500 வழங்க வேண்டும் – சோனியா காந்தி

கொரோனா பரவலை தடுக்க  இந்தியாவில் வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிவாரணமாக குறைந்து  ரூ. 7500 வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி காணொளி காட்சி மூலமாக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில், தலைமை ஏற்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் நாம் வணக்கம் தெரிவிக்க வேண்டும்.  ஊரடங்கின்போது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7500 வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.