1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: சனி, 14 டிசம்பர் 2019 (08:13 IST)

மஹாராஷ்டிராவில் அதிர்ந்தது பூமி..

மஹாராஷ்டிரா மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியில், இன்று காலை நிலாநடுக்கம்
ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.22 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.

.இதில் எதுவும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. முன்னாதாக இதே பால்கர் பகுதியில் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி 2.7 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது