1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Doctors gave treatment to krishnar statue

உடைந்த கிருஷ்ணர் சிலைக்கு கட்டுப்போட்டு சிகிச்சை செய்த மருத்துவர்கள்!

உத்தர பிரதேசம்
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் கிருஷ்ணர் சிலை உடைந்த நிலையில் மருத்துவர்கள் அதற்கு பேண்டேஜ் போட்டு சிகிச்சை செய்த செயல் கவனத்தைப் பெற்றுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா மருத்துவமனைக்குக் கடந்த வெள்ளிக்கிழமை கையில் ஒரு பையோடு வந்த பூசாரி ஒருவர் வந்து மருத்துவர்களை திகிலடைய வைத்துள்ளார். அந்த பையில் தினமும் தன் வீட்டில் வணங்கும் கிருஷ்ணர் சிலை உடைந்த நிலையில் இருந்துள்ளது. பூஜை செய்யும் போது கிருஷ்ணரின் கை உடைந்துவிட்டதாகவும் அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கூறி மருத்துவர்களிடம் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

மருத்துவர்கள் இதற்கு சிகிச்சை எல்லாம் அளிக்க முடியாது என்று எவ்வளவோ கூறியும் அவர் நச்சரிக்கவே, பின்னர் அவரை எப்படியாவது அனுப்ப வேண்டும் என்பதால் கிருஷ்ணர் பெயரை பதிவு செய்து உடைந்த கையை பேண்டேஜ் போட்டு ஒட்டி அனுப்பியுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. அதே சமயம் மருத்துவர்களின் அரிய நேரத்தை இப்படி மூட நம்பிக்கைகளுக்காக எடுத்துகொண்ட அந்த பூசாரிக்கு கண்டனங்களும் எழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
சுங்கசாவடியில் வாக்குவாதம்; கட்டணம் செலுத்தாமல் சென்ற வாகனங்கள்! – சேலத்தில் பரபரப்பு!