1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (12:38 IST)

அதிகரிக்கும் கொரோனா; டெல்லியில் திடீர் ஊரடங்கு அமல்!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் திடீர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பூசி வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா அதிகரிக்கும் மாநிலங்கள் பல பகுதி நேர, முழு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் டெல்லியில் கொரோனா அதிகரித்து வருவதால் டெல்லியில் திடீர் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் தொடங்கும் இந்த இரவு நேர ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.