1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 18 ஜூலை 2019 (20:34 IST)

தாதா தாவூத் இப்ராகிம்மின் உறவினர் கைது : பரப்பரபு சம்பவம்

மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் சர்வதேசம் பயங்கரவாதியும் நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராய்ச்சியில் உள்ளதாக தகவலகள் வெளியான நிலையில் சமீபத்தில் தாவூத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜபீர் மோட்டிவாலா என்ற ஒரு நபருடன் தாவூத் இப்ராகிம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் தாவூத்தின் கும்பலை சேர்ந்த ஃபாஹிம் எனபவனின் உதவியாளரான அஹ்மத் ராசா வாதாரியாவை சில நாட்களுக்கு முன்னர் கைது செய்தது. 
 
இந்நிலையில் தற்போது அவருடன் தொடர்பில் இருந்தவரான இப்ராஹிமின் தம்பி இக்பால் கஸ்கரின் மகனுமான ரிஸ்வான் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.