1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 19 மே 2021 (13:41 IST)

டெல்லியில் வெகுவேகமாக குறையும் கொரோனா: மருத்துவமனைகளில் படுக்கைகள் காலி!

தமிழகம் கேரளா கர்நாடகா ஆந்திரா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த மகாராஷ்டிரா டெல்லி ஆகிய மாநிலங்களில் மிக வேகமாக குறைந்து வருகிறது
 
டெல்லியில் நேற்று 14,205 கொரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் என்றும் அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் சுமார் 13,000 படுகைகள் காலியாக இருப்பதாகவும் தகவல்கள் எழுந்துள்ளன 
 
இந்நிலையில் டெல்லியில் நேற்று மொத்தம் 4452 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டது என்றும், குணமாகி வருபவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும் இதனால் டெல்லியில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த மார்ச் ஏப்ரல் மாதத்தில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி இருந்த நிலையில் தற்போது மிக வேகமாக டெல்லியில் கொரோனாவில் இருந்து மீண்டு வருவது மகிழ்ச்சியான செய்தியாக ஒன்றாக உள்ளது.