1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 19 டிசம்பர் 2020 (10:29 IST)

ஒரு கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் கெரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது. 

 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 27,000 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அந்த வகையில், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக, இதுவரை 95 லட்சத்து 50 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 
 
மேலும் நாடு முழுவதும் 3 லட்சத்து 10 ஆயிரம் பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில், 1 லட்சத்து 6 ஆயிரத்து 920 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று மட்டும் நாடு முழுவதும 340 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்து 80 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.