1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (20:43 IST)

60 ஆயிரம் நர்ஸுகளுக்கு கொரோனா உறுதி !!அதிர்ச்சி சம்பவம்

உலகம் முழுவதும் சுமார் 8 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மக்களைப் பாதுக்காக்க அந்தந்த நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இன்னும்  பொது ஊரடங்கு சிலதளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரான் நாட்டில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளந் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த சுமார் 60000 நர்ஸ்சுகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதாக ந்நாட்டு அரசு அதிகாரபுர்வமாக தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 60 ஆயிரம் நர்ஸ்களில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியகிறது. இந்தச் சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.