தொடர்புடைய செய்திகள்
- கொரோனா பயம்: கதவுகளை அடைத்த கத்தார்!!
- செல்போன் காலர்ட்யூன் நல்லா இருக்கு,, ஆனா..! – ராமதாஸ் ட்வீட்!
- ”மாநில அரசு செய்தது அநியாயத்தின் உச்சம்”.. வெளுத்து வாங்கிய நீதிமன்றம்
- கொரோனா பீதி: கோழி கிலோ ரூ.38க்கு விற்பனை - கண்டுகொள்ளாத மக்கள்!
- இந்திய பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு மேல் சரிவு..
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43 ஆக உயர்வு…
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கேரளாவில் நேற்று 5 பேருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஜம்முவில் ஒருவருக்கும், உத்தர பிரதேசத்தில் ஒருவருக்கும், டெல்லியில் மூன்றாவதாக ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே போல் இத்தாலியில் இருந்து எர்ணாகுளத்திற்கு வந்த தம்பதியரின் 3 வயது குழந்தைக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக இத்தாலிய பயணிகள் 16 பேருக்கு கொரோனா உள்ளது கண்டறியப்பட்டது. மேலும் கேரளாவில் 3 பேர் குணமடைந்த நிலையில், 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் சென்னையை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
