வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (11:45 IST)

கேரள - தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு!

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கேரளாவில் வாளையாறு உள்பட 13 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

 
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கடந்த மாதத்தில் உச்சத்தை அடைந்த நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கோரொனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. 
 
அண்டை மாநிலமான கேரளாவில் நாட்டின் தினசரி பாதிப்பில் 50% பதிவாகி இருப்பதால், அம்மாநிலத்தில் கொரோனா 3வது அலை தொடங்கி விட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 2 நாட்களாக அங்கு பாதிப்பு எண்ணிக்கை தினமும் 10,000க்கும் மேல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் கேரளாவில் வாளையாறு உள்பட 13 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் சில மாவட்டங்களிலும், கேரளத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தொற்று அதிகரித்துள்ளதால் தமிழ்நாடு  - கேரளா எல்லைகளில் வாகன சோதனை, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.