தொடர்புடைய செய்திகள்
- இந்த நாள் முதல் உயரும் பெட்ரோல், டீசல் விலை...? எவ்வளவு தெரியுமா??
- பிரியரங்கா போட்டியால் தொகுதி மாறுகிறாரா மோடி? அமித்ஷா விளக்கம்
- குஜராத் மக்களவைத் தேர்தல் – மோடி, அமித் ஷா வாக்களித்தனர் !
- இப்பவும் சொல்றேன், மோடி திருடர்தான்: மன்னிப்பு கேட்டும் திருந்தாத ராகுல்காந்தி!
- ’காவலாளி ஒரு திருடர்’ – உச்சநீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த ராகுல் !
பிரதமர் ஆவேன் என்று நினைத்ததில்லை – அக்ஷய்குமாரிடம் மோடி கலகல !
பிரதமர் மோடி தனது டெல்லி இல்லத்தில் நடிகர் அக்ஷய்குமாருக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தான் பிரதமாராவேன் என்று நினைத்ததில்லை எனக் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் நேற்றோடு 3 கட்டத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலயில் பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் நடிகரும் பாஜக ஆதரவாளருமான அக்ஷய் குமாருக்கு நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த நேர்காணலில் அரசியல் விஷயங்கள் கம்மியாகவும் மோடியைப் பற்றிய சொந்த விஷயங்கள் அதிகமாகவும் இடம்பெற்றுள்ளன. இதில் அக்ஷய் குமார் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு மோடி நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். அதில் நீங்கள் பிரதமர் ஆவீர்கள் என்று நினைத்ததுண்டா என்ற கேள்விக்கு மோடி,’ஒருபோதும் நான் பிரதமர் ஆவேன் என்று நினைக்கவில்லை’ எனக் கூறினார்.
மற்றொருக் கேள்வியான நீங்கள் ஏன் அரசியல் நகைச்சுவையாகப் பேசுவதில்லை எனக் கேட்டபோது ‘ நான் பேசும் போது எனது வார்த்தைகள் தவறாக அர்த்தம் கொள்ளப்படுமோ என்ற அச்சத்தில்தான் தான் அவ்வாறு பேசுவதில்லை’ எனக் கூறியுள்ளார்.
