1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2022 (22:53 IST)

இமாச்சல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

anurag thakur
சமீபத்தில் தேர்தல் ஆணையம், இமாச்சல பிரதேசத்திற்கு வரும் 12 ஆம் தேததி சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தது.

இதையடுத்து,காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர்,  பிரதமர் மோடி மீது  மக்கள் நம்பிக்கை வைத்துள்ளாதல் இமாச்சல பிரதேசத்தில்  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்! நாட்டிற்கு எதிராக கூச்சலிடும் சின்ன கும்பலுடன் ராகுல் கந்தி நடைபயணம் செய்து வருவதால்தான் அவருடன், பிரியங்கா காந்தி செல்லவில்லை. காங்கிரஸ் கட்சி இந்த மா நிலத்தில் மக்களுக்காக உழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj