ஞாயிறு, 8 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2022 (19:05 IST)

காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் அக்னிபத் திட்டம் ரத்து: பிரியங்கா காந்தி

Priyanka Gandhi
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்வோம் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்
 
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வரும் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்காக பிரியங்கா காந்தி கடந்த சில நாட்களாக அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார்
 
இந்த நிலையில் தற்போது அமலில் இருக்கும் அக்னிபத் திட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்வோம் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார் 
அதேபோல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இமாச்சல பிரதேசத்திற்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran