1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2019 (07:48 IST)

வங்கி அதிகாரிகள் போராட்டம்: 4 நாட்கள் ஏடிஎம்கள் முடங்க வாய்ப்பு!

செப்டம்பர் 26. 27 வெள்ளி, சனி ஆகிய இருதினங்களில் வங்கிகள் இணைப்பை எதிர்த்து வங்கி அதிகாரிகளின் சங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்துள்ளன. அதனையடுத்து 28,29 சனி ஞாயிறு என்பதால் நான்கு நாட்கள் வங்கிப்பணிகள் மற்றும் ஏடிஎம்கள் முடங்க  வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 
இந்த வேலைநிறுத்தத்தை வங்கி அதிகாரிகள் மட்டுமே நடத்துவதால் வங்கி ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வருவார்கள். வங்கிகளும் திறந்திருக்கும். ஆனால் முக்கிய பணிகளை உத்தரவிட வங்கி அதிகாரிகள் இருக்க மாட்டார்கள் என்பதால் ஏடிஎம்-இல் பணம் நிரப்புவது உள்பட ஒருசில பணிகள் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
எனவே வங்கியில் உள்ள முக்கிய வேலைகள் பணம் எடுப்பது போன்றவற்றை பொதுமக்கள் செப்டம்பர் 25ஆம் தேதி வியாழக்கிழமையே முடித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மீண்டும் வழக்கம்போல் 30ஆம் தேதி முதல் வங்கிகள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள், இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், இந்த வேலைநிறுத்தம் மக்களை துன்புறுத்தும் நோக்கத்தில் நடத்தப்படவில்லை என்றும் இந்த போராட்டம் நடத்தும் சூழலை மத்திய அரசு தான் ஏற்படுத்தி உள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது