1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2020 (11:57 IST)

பத்ரிநாத் பாதையில் திடீர் நிலச்சரிவு! – பதற செய்யும் வீடியோ!

இந்தியாவின் வடமாநிலங்களில் மழைப்பொழிந்து வரும் நிலையில் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பெரும் நிலச்சரிவின் வீடியோ காட்சிகள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.

வட இந்தியாவின் பெரும்பான்மை பகுதியில் தென்மேற்கு பருவமழை பொழிந்து வருகிறது. விடாத கனமழையால் நீர் நிலைகள், ஆறுகள் நிரம்பியுள்ள நிலையில் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அசாம், பீகார் மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக சமோலி மாவட்டத்தில் உள்ள முக்கிய போக்குவரத்து பகுதியான பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. நொடிப்பொழுதில் மலைப்பாதையில் இருந்து நிலம் சரிந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.