1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 ஜூன் 2019 (14:05 IST)

பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி பசு நெய்க்கு’ இவ்ளோ கிராக்கியா ?

டெல்லி, நியூய் ஃபிரண்ட் சாலையில் உள்ள காலினியில் ஒரு பதஞ்சலி ஸ்டோர்ஸ் இருக்கிறது.இங்கு வந்த நைஜீரிய இளைஞர்கள் 450 கிலோ நெய் கேட்டுள்ளனர். நெய்க்கு கடைக்காரர் காசு கேட்க அதற்கு நைஜீரியர்கல் ஒரு கார்பரேஷன் டெபிட் கார்டு கொடுத்துள்ளனர்.
அதாவது50 கிலோ நெய்க்கு மொத்தம் 2.25 லட்சம் ரூபாய்கள். அதைச் சட்டென வாங்கிப் பார்த்ததும் விபரம் தெரிந்த கடைக்காரருக்குச் சற்று சந்தேகம் வழுத்துள்ளது.
 
அதனால் இந்த டெபிட் கார்டு பற்றி மேலும் சில தகவல்கள் கேட்டுள்ளா கடைக்காரர். அப்போது அதுகுறித்து மழுப்பலாக பதிலளித்துள்ளதாகத் தெரிகிறது. ஒருவேளை இது திருட்டு டெபிட் காரர்டாக இருக்கலாம் என்று கடைக்காரர் உஷாராகி நெய்யை உள்ளே வைத்துவிட்டார். கடைக்காரர் கொஞ்சம் விவரமாக கேள்வி கேட்டு குடைந்தெடுக்கவே நைஜீரிய இளைஞர்கள் அங்கிருந்து ஓட்டமெடுத்தனர்.
 
கடைக்கார் உடனே டெல்லி ஃப்ரெண்ட்ஸ் காலனி காவல்நிலையத்தில் கொடுத்தார். இதுபற்றி  போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதில் நைஜிரிய இளைஞர்கள் 2013 ஆம் ஆண்டிலிருந்து விசா இல்லாமல் தங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. தற்போது நைஜீரிய இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 
இந்தியாவில் உற்பத்தியாகும் நெய்க்கு நைஜீரியாவில் அதிக அளவு விற்பனையாகும் என்பதால் நைஜீரியர்கள் இந்த மாதிரி வேலைகளில் தில்லு முல்லு வேலைகளில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.