திங்கள், 16 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 17 ஜூலை 2024 (15:28 IST)

வங்கி கடனை திரும்ப செலுத்தாத முடியாத நிலை.. கள்ளக்காதலி வீட்டில் தற்கொலை செய்த ஆடிட்டர்..

ஆடிட்டர் தனது கள்ளக்காதலிக்கு வங்கியில் இருந்து கடன் வாங்கி தந்ததாகவும் அந்த கடன்களை திரும்ப செலுத்த முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டதால் கள்ளக்காதலி வீட்டுக்கே சென்று தூக்கில் தொங்கிய தற்கொலை செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஷாஜி என்பவருக்கு திருமணம் ஆகியுள்ள நிலையில் அவருக்கு ஒரு கள்ளக்காதலியும் இருப்பதாக தெரிகிறது. அவர் அவ்வப்போது கள்ளக்காதலியை சந்தித்து வந்த நிலையில் அவருக்கு வங்கிகளில் இருந்து கடன் வாங்கியும் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் வாங்கிய கடனை கள்ளக்காதலி ஒழுங்காக திரும்ப செலுத்தாததால் ஷாஜியை வங்கி அதிகாரிகள் நெருக்கியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் கள்ளக்காதலின் வீட்டுக்கு சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்

அந்த வீட்டில் அவரது கள்ளக்காதலில் உள்பட யாரும் இல்லை என்றும் அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. கள்ளக்காதலிக்கு வங்கி கடன் வாங்கி கொடுத்து அதை திருப்பி செலுத்த முடியாததால் ஆடிட்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva