1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (12:55 IST)

கேஸ் சிலிண்டரில் 50 ஆயிரம் லிட்டர் சாராயம்: ஒருவர் கைது!

gas arrack
கேஸ் சிலிண்டரில் 50 ஆயிரம் லிட்டர் சாராயம்: ஒருவர் கைது!
சமையல் எரிவாயு சிலிண்டரில் கள்ளச்சாராயம் நிரப்பி விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பீகார் மாநிலத்தில் தற்போது மதுவிலக்கு அமல் செய்யப் பட்டுள்ளது. இதனால் கள்ளச்சாராயம் பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த நபர் ஒருவரை கைது செய்தனர் 
 
அவரிடம் விசாரணை செய்ததில் ஏராளமான சமையல் எரிவாயு சிலிண்டர்களில் வைத்து இருந்த 50 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன