1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (13:26 IST)

அழகிகளை வைத்து விபச்சாரம் செய்த நடிகை.. வாடிக்கையாளர் போல் சென்று கைது செய்த போலீசார்..!

மும்பையை சேர்ந்த பிரபல நடிகை அழகிகளை வைத்து விபச்சாரம் செய்ததாக தகவல் வெளியானதை அடுத்து வாடிக்கையாளர்கள் சென்று போலீசார் அவரை கைது செய்தனர். 
 
மும்பையை சேர்ந்த பிரபல நடிகை ஆர்த்தி மிட்டல். இவர் மாடல் அழகிகளை வைத்து விபச்சாரம் செய்வதாக மும்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் போலீசார் மாறுவேடத்தில் ஆர்த்தியிடம் அணுகி வாடிக்கையாளர் போல் இரண்டு அழகிகள் தேவை என்று கூறியுள்ளனர். 
 
இதனை அடுத்து 60 ஆயிரம் ரூபாய் வரை பேரம் பேசிய ஆர்த்தி இரண்டு அழகிகளை அனுப்பி வைத்துள்ளார். அந்த அழகிகளை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பிய போலீசார் அதிரடியாக நடிகை ஆர்த்தியை கைது செய்தனர். 
 
அதுமட்டுமின்றி வளர்ந்து வரும் இளம் மாடல்களை அவர் மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் தற்போது அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை அழகிகள் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran