வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 9 மார்ச் 2020 (19:52 IST)

பெங்களூரில் கொரோனா வைரஸ் உறுதி..

பெங்களூரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் உலகளவில் 3500 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தமிழகம், உத்தரபிரதேசம், கேரளா, ஜம்மு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் அமெரிக்காவிலிருந்து திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனை கர்நாடக அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். இதன் மூல இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.