மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!
மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்திற்கு மூன்று கோடி ரூபாய் வாடகை என்று தகவல் வெளியானது. இதனால் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.
தெற்கு மும்பை கோட்டை பகுதியில் உள்ள இந்த கட்டிடம் 119 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த கட்டிடத்தை ஜாரா என்ற நிறுவனம் மாத வாடகை மூன்று கோடி ரூபாய் என்ற மதிப்பில் எடுத்து இயங்கி வந்தது. ஆனால் தற்போது அந்த நிறுவனம் தங்களது கடையை மூடிவிட்டதாக அறிவித்துள்ளது.
இந்த கடை தவிர, மற்ற கடைகள் எப்போதும் போல் இயங்கும் என்றும், இந்த ஒரு கடை மட்டும் மூடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஜாரா கடை இயங்கி வந்த நிலையில், தற்போது இந்த இடத்தில் ஹவுஸ் பாப் அப் என்னும் கடை அமைவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு இந்த இடத்தில் வாடகைக்கு இருக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த இடத்தின் மாத வாடகை மூன்று கோடி ரூபாயாக உள்ள நிலையில், இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்த வாடகை இரு மடங்கு உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva