வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (14:46 IST)

2-வது திருமணம் செய்ததால் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்

ஒடிசாவில் மனைவி 2 வது திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில், கணவன் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார்(24). இவரது மனைவி சங்கீதா சவுத்ரி (18). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
 
இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், சங்கீதா கோபித்துக் கொண்டு கணவரை பிரிந்து தாய்வீட்டுக்கு சென்று விட்டார். மேலும் ரமேஷ் குமார் மீது சங்கீதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இதனையடுத்து சங்கீதாவின் பெற்றோர், சங்கீதாவிற்கு வேறொருவருடன் திருமணம் செய்து வைத்தனர். இதனால் சங்கீதாவின் குடும்பத்தினர் மீது ரமேஷ் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் சங்கீதா தொடர்ந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சங்கீதா தனது தாயார் மற்றும் 3வது சகோதரியுடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். ஏற்கனவே அவர்கள் மீது கோபத்தில் இருந்த ரமேஷ், அவர்களைக் கண்டதும் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சங்கீதா, அவரது தாய் மற்றும் சகோதரியையும் வெட்டினார். இதில் சங்கீதா சம்பவ இடத்திலே பலியானார்.
 
படுகாயமடைந்தவர்களை மீட்டு போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.