1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (22:07 IST)

ஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8பேர் பலி!

accident
ஜம்மு காஷ்மீரில் ஒரு கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8பேர் பலியாகினர்.

ஜம்மு காஷ்மீரில் கிஸ்துவார் மாவட்டத்திலுள்ள ஒருமலைபாதையில் இன்று கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள பல அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து  ஏற்பட்டது.

இந்த விபத்தில், காரில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்தில்  3 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்ட காவல்துறை மற்றும் போலீஸார்  காரையும், அதில் பயணித்தவர்களையும் மீட்டனர்.
அந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.