1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 25 நவம்பர் 2023 (21:28 IST)

41 தொழிலாளர்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள்-சுரங்கப்பாதை தொழில்நுட்ப நிபுணர்

Uttarakhand
உத்தரகாண்ட் மாநிலத்தில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து ஏற்பட்ட நிலையில் தொழிலாளர்கள் மீட்கப்படுவர் என தொழில்நுட்ப நிபுணர் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில்  முதல்வர் புஷ்கர் சிங் தமி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டது.

இந்தச் சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் உள்ளே 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளனர்.

அதாவது,  4.5 கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மா நில பேரிடர் மீட்புப் படைகள் தீயணைப்புத்துறையினர் பணியாளர்களை மீட்கத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் வெளியான நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களுக்கு தேவையான தண்ணீர், ஆக்சிஜன், உணவு ஆகியவை குழாய்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்க வேண்டும் என  கோரிக்கைகள் எழுந்துள்ள  நிலையில், உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை இன்றிரவுக்குள் மீட்கப்படுவார்கள் என தகவல் வெளியாகிறது.

 
41  தொழிலாளர்களும் மீட்கும் பணியில் சற்று பின்னடைவு ஏற்பட்ட நிலையில், அவர்களை பத்திரமாக வேண்டுமென மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்த  நிலையில்,  மலைப்பகுதியில் நடைபெறும் மீட்புப் பணி என்பதால் இது மிகவும் சிக்கலானதாக உள்ளதாக சர்வதேச சுரங்கப்பாதை தொழில்நுட்ப நிபுணர் அர்னால்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

இந்த பணி எப்போது நிறைவடையும் என  உறுதியாகச் சொல்ல முடியாது, கணிக்க முடியாத வகையில் உள்ள போர் போன்ற சூழல்தான் இந்த மீட்புப் பணியில் உள்ளது. 41 தொழிலாளர்களும் கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள் என  நம்புவோம். ஆனால், காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.