வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 11 ஜூலை 2024 (14:56 IST)

8 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. 13 வயது சிறுவர்களின் கொடூர செயல்..!

ஆந்திர மாநிலத்தில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் இந்த கொடூரத்தை செய்தது 12 மற்றும் 13 வயது சிறுவர்கள் என்றும் வெளியாகி உள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திர மாநிலத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் எட்டு வயது சிறுமியை மூன்று மாணவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த மூன்று சிறுவர்களும் 12 முதல் 13 வயது உடையவர்கள் என்றும் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்றும் கூறப்படுகிறது 
 
கடந்த ஞாயிறு அன்று 8 வயது சிறுமி பூங்காவின் அருகில் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த சிறுமியை ஏமாற்றி அருகில் உள்ள தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு தான் அவர்கள் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது
 
பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி சிறுமியை கொலை செய்து வாய்க்காலில் பிணத்தை போட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. காணாமல போன சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தபோது இந்த கொடூர செயலை செய்தது 3  சிறுவர்கள் என தெரிய வந்ததை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
 
Edited by Siva