Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. சுமார் 500 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Written By Siva
Updated: புதன், 13 மார்ச் 2024 (11:43 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதல் சரிவில் உள்ளது என்பதும் சற்று முன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 480 புள்ளிகள் சரிந்து 73 ஆயிரத்து 184 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 175 புள்ளிகள் சரிந்து 22,140 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக சரிந்து வருவது முதலீட்டாளர்கள் அச்சத்தில் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பங்குச்சந்தை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, கல்யாண் ஜூவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் ஐடிசி உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

ப சிதம்பரம் ஒரு உண்மையான நக்சல்.. அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சர்ச்சை பேச்சு...!

தமிழ்நாட்டில் விரைவில் 50 மாவட்டங்கள்.. அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..

திடீரென ரூ.22,000 விலை குறைந்த ஆப்பிள் ஐபோன் விலை.. லேட்டஸ்ட் விலை என்ன?

பொறியியல் கலந்தாய்வு 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிந்தது.. 88,930 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு...

சில முக்கிய ரயில்கள் இனி எழும்பூரில் இருந்து கிளம்பாது: தெற்கு ரயில்வே அறிவிப்பு.. முழு விவரங்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments