1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today share market sensex and nifty

மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

share
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் சென்செக்ஸ் 83 ஆயிரத்துக்கும் அதிகமாக தற்போது விற்பனையாகி வருவதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்தில் உள்ளது என்பதும் சென்செக்ஸ் 155 புள்ளிகள் உயர்ந்து 83 ஆயிரத்து 50 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நான் நிப்டி 47 புள்ளிகள் உயர்ந்து 25,404 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. இன்று மாலைக்குள் இன்னும் சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், எச்.டி.எப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
இட்லி சாப்பிடும் போட்டி! தொண்டையில் இட்லி சிக்கிய பலியான நபர்! - கேரளாவில் சோகம்!