தொடர்புடைய செய்திகள்
- தொடர்ந்து 4 வது நாளாக பங்குச்சந்தை ஏற்றம்.. இன்றைய நிப்டி நிலவரம்..!
- ஹிண்டன்பர்க் குறிவைத்த இன்னொரு நிறுவனம்.. ஒரே நாளில் 9% வீழ்ச்சி அடைந்த பங்குகள் விலை..!
- நேற்று போல் பெரிய அளவில் மாற்றமின்றி பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
- ஒரே இடத்திலேயே நிற்கும் சென்செக்ஸ், நிப்டி.. இன்றைய பங்குச்சந்தை நிலவரம்..!
- வாரத்தின் முதல் நாளே 500 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!
இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் உற்சாகம்..!
இந்திய பங்குச் சந்தை இந்த வாரம் நான்கு நாட்களிலும் ஏற்றத்திலிருந்து நிலையில் இன்றும் ஏற்றத்தில் வர்த்தகம் தொடங்கியுள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 280 புள்ளிகள் உயர்ந்து 82418 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 25,230 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, ஐடிசி, கரூர் வைசியா வங்கி, மணப்புரம் கோல்டு உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் டாட்டா மோட்டார்ஸ், கோல்டு பீஸ் உள்ளிட்ட சில பங்குகளின் விலை குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை ஏற்றம் கண்டதால் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் அடைந்தார்கள் என்றாலும் புதிதாக பங்கு சந்தைக்கு வரும் முதலீட்டாளர்கள் தகுந்த ஆலோசனை கேட்டு முதலீடு செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Siva
