1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. share market sensex and nifty status

சென்செக்ஸ், நிப்டி இன்றைய நிலை என்ன? ஏற்றமா? இறக்கமா?

பங்குச்சந்தை
இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் நேற்று உயர்ந்த நிலையில் இன்றும் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது உயர்வில் இருந்த நிலையில் சற்றுமுன் இந்திய பங்குச் சந்தை 305 புள்ளிகள் உயர்ந்து 65 ஆயிரத்து 930 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி  89 புள்ளிகள் அதிகரித்து 19,635   என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பங்குச்சந்தை சரிந்து வந்தாலும் இன்று உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றும் மேலும் பங்குச்சந்தை இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
1,200 கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட கும்மியாட்டம்... தமிழ் பாரம்பரியத்தை மீட்கும் ஈஷா கிராமோத்சவம்!