1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Share market sensex and nifty status

2 நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Share Market
இந்தியா பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் பெற்றனர் என்பது தெரிந்ததே. ஆனால் இன்று திடீரென மும்பை பங்குச்சந்தை சரிந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 125 புள்ளிகள் சரிந்து 60,000 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 40 புள்ளிகள் சார்ந்து 17,725 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பங்குச்சந்தை இன்னும் ஒரு சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் முதலீட்டாளர்கள் கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பங்கு சந்தையில் முதலீடு செய்வது லாபத்தை கொடுக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
தன்னுடன் படித்த கல்லூரி நண்பருக்கு ரூ.1500 கோடி மதிப்புள்ள வீடு பரிசளித்த முகேஷ் அம்பானி..!