1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2022 (09:47 IST)

3 நாள் இறக்கத்திற்கு பின் இன்று உயர்ந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

share
இந்திய பங்கு சந்தை கடந்த மூன்று நாட்களாக சரிந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
இந்த வாரம் முழுவதுமே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சரிந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 37 புள்ளிகள் உயர்ந்து 62448 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 12 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 572 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை நிப்டி இன்று உயர்ந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் இன்னும் சில நாட்களுக்கு பங்குச்சந்தை உயர்வாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva