தொடர்புடைய செய்திகள்
- பெட்ரோல், டீசல் மூலம் இந்திய அரசுக்கு கிடைக்கும் வரி 300% அதிகரிப்பு
- பெட்ரோல் டீசலால் மத்திய அரசுக்கு 300 சதவீதம் அதிக வருமானம்!
- பெட்ரோல் டீசல் விலை உயர்வு; எதிர்கட்சிகள் அமளி! – மாநிலங்களவை ஒத்திவைப்பு!
- கொரோனா தடுப்பூசி சான்றிதழ்… மோடியின் படத்தை நீக்கவேண்டும் – தேர்தல் ஆணையம் உத்தரவு!
- பெட்ரோல், டீசல் விலை ரூ.100 எட்டும் அபாயம்..மக்கள் அதிர்ச்சி
பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும்: எப்படி தெரியுமா?
சமீப காலமாக விண்ணை முட்டி வந்த பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும் என கூறப்படுகிறது.
கொரோனாவால் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மீண்டும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இதன் காரணமாக மீண்டும் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை குறையத் தொடங்கியிருக்கிறது.
கடந்த 10 -14 நாட்களில், கிட்டத்தட்ட 10% அளவுக்கு விலை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் உள்நாட்டில் எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை குறைவை அதன் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும்பட்சத்தில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும் என கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன.
