வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 மார்ச் 2021 (10:36 IST)

பெட்ரோல் டீசல் விலை உயர்வு; எதிர்கட்சிகள் அமளி! – மாநிலங்களவை ஒத்திவைப்பு!

ஆண்டு பட்ஜெட் தொடர்பான விவாதங்களுக்கான மாநிலங்களவை கூட்டத்தில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் தொடர்பான கூட்டத்தொடர் மாநிலங்களவையில் நடந்து வருகிறது. மாநிலங்களவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் தொடர்வதில் தாமதம் ஏற்பட்டது, இந்நிலையில் மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.