தொடர்புடைய செய்திகள்
- சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்
- நேற்றைய மோசமான சரிவுக்கு பின் சற்று உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!
- பங்குச்சந்தை இன்று சிறிய அளவில் ஏற்றம்.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?
- வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தையின் நிலவரம் என்ன? சென்செக்ஸ், நிப்டி அப்டேட்..!
- டிரம்ப் வெற்றியால் உயர்ந்த பங்குச்சந்தை.. மீண்டும் சரிவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
பங்குச்சந்தை இன்றும் சரிவு.. கோடிக்கணக்கில் நஷ்டமாகும் முதலீட்டாளர்கள்..!
இந்திய பங்குச் சந்தை கடந்த வாரம் முழுவதுமே சரிவில் இருந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாள் மீண்டும் சரிவில் வர்த்தகம் தொடங்கி இருப்பது முதலீட்டாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.
மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில், ஆரம்பத்திலேயே 330 புள்ளிகள் சரிந்து, 77,102 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதைப் போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 105 புள்ளிகள் குறைந்து, 23,330 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டாட்டா ஸ்டீல், டைட்டான் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர், இண்டஸ் இன்ட் வங்கி, இன்போசிஸ், ஐடிசி, கோடக் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
Edited by Siva
