தொடர்புடைய செய்திகள்
- தடுப்பூசி உற்பத்தியை தொடங்க தயார் நிலையில் தமிழக அரசு - மத்திய அரசின் முடிவு என்ன?
- ஆக்ஸிஜன் அளவு 94க்கு கீழ் இருந்தால் அனுமதி கிடையாது! – புதிய நெறிமுறைகள் வெளியீடு!
- ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி – மு.க.ஸ்டாலின் தகவல்!
- வெயிலால் முகத்தில் ஏற்பட்ட கருமையை போக்க வீட்டு குறிப்புகள்!
- ஒரு நாளைக்கு 20 நிமிடம் கை தட்டினால் இவ்வளவு நன்மையா!
மாதத்தின் முதல் நாளே எகிறிய தங்கத்தின் விலை!
ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கத்தின் விலை மாதத்தின் முதல் நாளான இன்று அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று (ஜூன் 1) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,637 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.4,628 இருந்தது. அதேபோல, நேற்று ரூ.37,024-க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.72 உயர்ந்து ரூ.37,096 விற்பனையாகிறது.
இதேபோல, வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.76.80 ஆக இருந்தது. இன்று அது ரூ.77.30 ஆக உயர்ந்துள்ளது.
