1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2021 (10:49 IST)

ஏறுமுகத்தில் தங்கம்: நீண்ட நாட்களுக்கு பிறகு உயர்வு!

ஏறுமுகத்தில் தங்கம்: நீண்ட நாட்களுக்கு பிறகு உயர்வு!
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. 
 
ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்து ரூ.36,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 அதிகரித்து ரூ.4,622-க்கு விற்பனை செய்யப்படுகிறது.