தொடர்புடைய செய்திகள்
- பள்ளி மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த ஆட்சியர் – மத்திய பிரதேசத்தில் பரபரப்பு
- வருமான வரி கட்டணத்தில் புதிய மாற்றங்கள்: கொண்டாட்டமும், திண்டாட்டமும்!?
- வாழைப்பழம் விற்றால் அவ்வளவுதான்! தடை செய்த லக்னோ ரயில் நிலையம்
- சுஸுக்கி நிறுவனத்தில் 3000 பேர் வேலையிழப்பு: சரிவில் ஆட்டோமொபைல்ஸ்
- இனி இரவு நேரங்களில் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாதா? – வருகிறது புதிய சட்டம்
முடிவே இல்லாமல் செல்லும் தங்கம் விலை – 112 ரூபாய் உயர்வு !
தங்கத்தின் விலை இன்று மீண்டும் 112 ரூபாய் உயர்ந்து 29,814 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலக பங்குசந்தையில் தொடர்ந்து சரிவுகள் ஏற்பட்டு வருவதால் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த வாரம் தங்கம் விலை உயர்ந்து 29 ஆயிரத்தை தொட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களில் ஒரே நாளில் 640 ரூபாயும் மற்றொரு நாளில் 304 ரூபாயும் உயர்ந்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை ரூ 112 உயர்ந்துள்ளது. இதன்மூலம் ஒரு கிராம் 3,727 ரூபாய்க்கும்,.சவரன் தங்கம் 29,816 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. ஒரு பவுன் தங்கம் 30,000 ஆயிரத்தைத் தொட இன்னும் 184 ரூபாயே இருக்கிறது.
இந்திய பொருளாதாரம் மந்தநிலையை அடைந்து இருப்பதால் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதனால் தான் தங்கத்தின் விலை அதிகமாகிக்கொண்டே செல்வதாக பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
