வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Updated : திங்கள், 25 மார்ச் 2019 (11:45 IST)

’திமுக துரைமுருகனுக்கு ’நன்றி தெரிவித்த பிரேமதலதா விஜயகாந்த்

சமீபத்தில் கூட்டணிக்காக தேமுதிகவுக்க்கும், திமுகவுகும் இடையே கருத்து மோதலுருவானது. இதில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் துரைமுருகனை வசைபாடினார் தேமுதிக பொருளாளர் ட்பிரேமலதா விஜயகாந்த். பின்னர் சில நாட்களில்  4 சீட்கள் கொடுத்து அதிமுக தன் மெகா கூட்டணியில் தேமுதிகவை இணைத்துக்கொண்டது.
இந்நிலையில் தற்போது அனைத்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணிக் கட்சிகளின் விருதுநகர்  நாடாளுமன்றத் தொகுதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா கூறியதாவது:
எதிர்க்கட்சியினர் என்னன்மோ சிண்டு முடித்தார்கள். நாடகம் நடித்தார்கள்.புரளியை அமைத்தார்கள். ஆனால் நாரதர் கூட்டம் நன்மையில் முடிந்ததற்காக துரைமுருகனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதிமுக- தேமுதிக வுக்கும் இயற்கையாகவே கூட்டணி அமைந்துள்ளது. இதிலேயே வெற்றியும் உள்ளது. கரை வேட்டியும் அப்படித்தான் ஒரே மாதிரி சற்று உன்னிப்பாக பார்த்தால் தான் வித்தியாசம் தெரியும் இவ்வாறு தெரிவித்தார்.