ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 28 மார்ச் 2024 (19:54 IST)

ஒருவாட்டி மிஸ் ஆகும்..! எப்பவுமே மிஸ் ஆகாது..! தந்தை பாணியில் பேசிய விஜய பிரபாகரன்..!!

Vijayaprabakaran
அதிமுக தேமுதிக கூட்டணி வெற்றி கூட்டணி என்றும் இந்த கூட்டணி மக்களவை தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் விருதுநகர் தொகுதி வேட்பாளர் விஜய பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவிற்கு 5  தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் தொகுதியில் கேப்டனின் மூத்த மகன் விஜய பிரபாகரன் களம் இறக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் விருதுநகரில் தேர்தல் பரப்புரையில் விஜய பிரபாகரன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், எடப்பாடி அண்ணன் எப்போதும் அழகா சிரிப்பாரு, தலைமை அழகா சிரித்தால் தான் கீழே இருக்கும் தொண்டர்கள் வரை சிரிப்பார்கள் என்று தெரிவித்தார். 
 
அதிமுகவில் உள்ள அனைவரும் என்னை அரவணைத்து, உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்னை பார்ப்பதாக விஜய பிரபாகரன் கூறினார்.
 
அதிமுக தேமுதிகவில் எந்த வேறுபாடும் இல்லை என்றும் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்றும் அதனால் தான் எம்ஜிஆர், கருப்பு எம்ஜிஆர் என்ற பெயர் வந்ததா கூட எனக்கு தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் இந்த கூட்டணி ராசியான கூட்டணி என்றும் இது நிச்சயம் தொடரும் என்றும் குறிப்பிட்டார். ஒருவாட்டி மிஸ் ஆகும், எப்பவுமே மிஸ் ஆகாது என தெரிவித்த விஜய பிரபாகரன், 2011ல் ஜெயலலிதாவும், கேப்டனும் ஆரம்பிச்ச கூட்டணி இந்த கூட்டணி என்றார்.
 
கேப்டனை குழப்பி ஒரு கும்பல் திமுகவுக்கு சென்று விட்டதாகவும், மறு கும்பல் ஓபிஎஸ் உடன் சென்று விட்டதாகவும் அவர் தெரிவித்தார். மீண்டும் கஷ்டப்பட்டு இந்த கூட்டணி சேர்ந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்த கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் விஜய பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

 
எடப்பாடி பழனிச்சாமி, பிரேமலதா ஆகிய இருவரும் ராசியானவர்கள் என்பதால், இரு தலைமையும் சேரும்போது மக்களுக்கு பொன்மனச் செம்மல் எம்ஜிஆரின் ஆட்சி போன்று சிறப்பாக இருக்கும் என்று விஜய பிரபாகரன் கூறினார்.