1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Airtel Vodafone charges increased

ஏர்டெல், வோடஃபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு Bad news..

ஏர்டெல்
ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் சேவை கட்டணத்தை 42 % உயர்த்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பிறகு ஏர்டெல், வோடஃபோன் வாடிக்கையாளர்கள் பலர் ஜியோவிற்கு தாவினர். இதனால் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்தன.

அதன் பின்பு ஜியோக்கு நிகரான திட்டங்களை அமல்படுத்தி, தனது வாடிக்கையாளர்களை ஓரளவு திருப்திப்படுத்தியது. இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி வந்த ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள், சேவை கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளன.

அதன் படி, ஏர்டெல்லின் டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால் திட்டத்தில் 28 நாட்களுக்கான ரூ.129 கட்டணம் 148 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் 1699 ரூபாயிலிருந்த ஓராண்டிற்கான கட்டணம் 2,398 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.

இதே போல் வோடஃபோனின் டேட்டே மற்றும் அன்லிமிட்டட் கால் திட்டத்தில் 28 நாட்களுக்கான ரூ.179 கட்டணம் 299 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் 1699 ரூபாயிலிருந்த ஓராண்டு கட்டணம் 2399 ரூபாயாக உயர்ந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
இன்று முதல் நீட் தேர்வுக்கான விண்ணப்பம் ஆரம்பம்: விண்ணப்பிப்பது எப்படி?