1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
  4. MS Dhoni Reveals Why Ravindra Jadeja Bowled The Final Over vs Delhi Capitals

ஜடேஜா ஏன்? தோனி விளக்கம் கொடுத்தும் தீராத சோகம்!

IPL 2020
கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் என தோனி போட்டிக்கு பிந்தைய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். 
 
வழக்கம் போல் வெற்றி பெற வேண்டிய ஒரு போட்டியை சிஎஸ்கே அணியின் சொதப்பல் ஆட்டம் காரணமாகத்தான் நேற்று தோல்வி அடைந்தது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் கடைசி ஓவரை ஜடேஜாவிற்கு கொடுத்தது மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிரது. 
 
இது குறித்து தோனி போட்டிக்கு பிந்தைய பேட்டியில், பிராவோ உடல் தகுதியுடன் இல்லை. இதனால் களத்தில் இருந்து வெளியேறிய பிராவோ மீண்டும் களத்திற்கு வரவில்லை. இதன் காரணமாகவே ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என விளக்கம் அளித்தார். 
 
இருப்பினும் அந்த ஓவரில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் மிக எளிதாக இலக்கு எட்டப்பட்டு டெல்லி அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
டாஸ் வென்ற ஐதராபாத்: மோர்கனுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?