Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்லரை அடுத்து பாண்ட்யா பிரதர்ஸ்… தோனியின் ஜெர்ஸியோடு வெளியான புகைப்படம்!

Updated: சனி, 24 அக்டோபர் 2020 (10:50 IST)
சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஜெர்ஸியுடன் பாண்ட்யா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

இதுவரையில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் மட்டுமே வென்று தரவரிசை பட்டியலில் இடம் பெறாதது மட்டுமன்றி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதியை இழந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே ப்ளே ஆஃப் செல்லாதது இதுவே முதல்முறை. நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் தோனி மற்றும் சிஎஸ்கே வீரர்களின் மேல் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இதையெல்லாம் விட்டுவிட்டு தோனி ரசிகர்கள் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். நேற்றைய போட்டி முடிந்ததும் ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகிய இருவரும் தோனியின் ஜெர்ஸியை அவரின் நினைவாக வாங்கிக் கொண்டு அதைப் புகைப்படமாக வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே இதுபோல ஜோஸ் பட்லரும் தோனியின் ஜெர்ஸியுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

எல்லாம் காட்டு

இது தான் பாகிஸ்தானின் பெஸ்ட் அணி.. 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அணி குறித்து பயிற்சியாளர்..

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் .. பாகிஸ்தானை 55 ரன்களில் சுருட்டிய இந்திய அணி..

மகளிர் ஆசியக்கோப்பை 2026 .. சாதனை மேல் சாதனை செய்த ஸ்மிருதி மந்தனா.. குவியும் வாழ்த்துக்கள்..

அண்டர் 19 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய 62 வீரர்களின் வயதில் மோசடி புகார்: அதிர்ச்சி தகவல்..

2027 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? இம்பாக்ட் பிளேயராக மட்டும் களமிறங்குவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments