1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (17:25 IST)

ஆடி மாதம் அம்மனுக்கு விசேஷமான காலமாக கூறப்படுவது ஏன்...?

ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வதுண்டு. ஆடியில் விதை விதைத்தால், மழை நாட்களில் பயிர் தழைத்து, தை மாத அறுவடையில் நல்ல மகசூல் கொடுக்கும்.


ஆடி மாதத்தில் ஞாயிறு பகவானின் சூட்சும சக்திக் கதிர்கள் பூமியில் விழுவதால், ஜப தபங்கள், மந்திரங்கள், பூஜைகள் எது செய்தாலும் பன்மடங்கு பயனைத் தரும் என்று கூறப்படுகிறது.

ஆகையால் பக்த கோடிகள் அனைவரும் இந்த புனிதமான மாதத்தில் தெய்வ காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, தெய்வானுகூலம் பெற வேண்டும்’

ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. இது மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது.

ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் அமைகிறது. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக பின்பற்றப்படுகிறது.

ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்சமாக அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதம் அம்மன் பக்தர்களுக்கு விசேஷமான காலமாக விளங்குகிறது.