திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில்: நாய் வாகனமில்லா யோக பைரவர் தரிசனம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில், தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலமாகும். இத்தல இறைவன் திருத்தளிநாதர், இறைவி சிவகாமி.
இக்கோயிலின் தனிச்சிறப்பு, இங்குள்ள பைரவர் நாய் வாகனம் இல்லாமல், வெண்ணிற ஆடை அணிந்து யோக நிலையில் காட்சியளிப்பதாகும். அசுரர்களை வதம் செய்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க, பைரவர் சிவலிங்க பூஜை செய்து இங்கு யோக நிலையில் அமர்ந்துள்ளார். இவர் வலது கரத்தில் சிவலிங்கத்தை ஏந்தி, கால் கட்டை விரலை மட்டும் தரையில் ஊன்றியபடி அருள் பாலிக்கிறார். கிரக தோஷங்கள் நீங்க, இவரை வணங்குவது சிறப்பு என ஐதீகம்.
முன்பு பாவங்கள் செய்து மனம் திருந்திய வால்மீகி முனிவர் இங்குத் தவமிருந்து, புற்றில் இருந்த அவருக்குச் சிவன் காட்சியளித்ததால், இறைவன் 'புற்றீஸ்வரர்' என்றும், தலத்தின் பெயர் 'திருப்புத்தூர்' என்றும் ஆனது.
இங்கு மகாவிஷ்ணுவும் 'யோக நாராயணராக' தனிச் சன்னதியில் யோக நிலையில் காட்சியளிக்கிறார். ராகு, கேது தோஷங்களைப் போக்கும் திருநாகேஸ்வரர் சன்னதியும் இங்கு அமைந்துள்ளது.
Edited by Mahendran