செவ்வாய், 2 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 டிசம்பர் 2025 (11:55 IST)

திருவண்ணாமலை கிரிவலம்: இந்த மாத பௌர்ணமிக்கான உகந்த நேரம் அறிவிப்பு!

திருவண்ணாமலை கிரிவலம்: இந்த மாத பௌர்ணமிக்கான உகந்த நேரம் அறிவிப்பு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் மகா தீப மலையை சுற்றி கிரிவலம் செல்வது ஒவ்வொரு பௌர்ணமியன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு முக்கியமான வழிபாடாகும்.
 
இந்த மாதத்திற்கான பௌர்ணமி திதி தொடங்கும் மற்றும் முடிவடையும் நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பௌர்ணமி நாளை மறுநாள் காலை 7.58 மணிக்கு தொடங்குகிறது. திதி வெள்ளிக்கிழமை காலை 5.37 மணிக்கு முடிவடைகிறது. இந்த குறிப்பிட்ட கால அவகாசம் கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதையொட்டி, மாவட்ட நிர்வாகம், திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. பக்தர்கள் இந்த நேரத்தை பயன்படுத்தி அமைதியான முறையில் கிரிவலம் செல்ல கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
 
Edited by Mahendran