சனி, 28 செப்டம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முகம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் போக்கும் காஃபிக்கொட்டை !!

காஃபிக் கொட்டையினை லேசாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அடுத்து காஃபித் தூளுடன் ஆலிவ் ஆயில், நல்லெண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இப்போது காஃபிக் கொட்டை ஃபேஸ்பேக் ரெடி.

இந்த காஃபிக் கொட்டை ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யவும், மேலும் முகத்தைக் குளிர்ந்த நீர் கொண்டு கழுவவும். முகம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகிவிடும்.
 
கடலை மாவுடன், காபி தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக்க வேண்டும். இதனை முகத்தில் தடவி காய்ந்தவுடன் கழுவினால் முகம்  பளிச்சென்று தோன்றும். 
 
இரண்டு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் அப்லை செய்து 10 நிமிடம் காயவிட்டு பின் கழுவினால் சருமமானது மென்மையாக இருக்கும். 
 
காபி தூளை எலுமிச்சை சாற்றோடு கலந்து முகத்தில் பேக் போன்று பயன்படுத்தினால் ஃபேசியல் செய்தது போல் முகம் மின்னும். சென்சிடிவ் ஸ்கின் இருப்பவர்கள் எலுமிச்சைக்கு பதிலாக ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.
 
கடல் உப்புடன் காபி தூள் சேர்த்து ஆலிவ் எண்ணெய்யில் கலந்து சருமத்தில் 15 நிமிடம் தேய்த்து மசாஜ் செய்து பின் கழுவவும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமையை நீங்கும்.