செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2023 (20:02 IST)

தினமும் 4 மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டர் உபயோகித்தால் என்னென்ன பாதிப்புகள் வரும்?

கம்ப்யூட்டர் என்பது தற்போது அனைத்து பணிகளிலும் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் அதிக நேரம் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால் ஏற்பட்டும் பாதிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது
 
குறிப்பாக நான்கு மணி நேரத்துக்கு மேல் கம்ப்யூட்டரை தொடர்ந்து பயன்படுத்துவதால் கண் பாதிப்பு உள்ளிட்ட ஒரு சில பாதிப்புகள் வரும் என்று கூறப்படுகிறது. நான்கு மணி நேரத்திற்கு மேல் கணினி உபயோகிப்பவர்கள் 75% பேர் கண் நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் இவற்றை தவிர்க்க கம்ப்யூட்டர் மானிட்டரில் இருந்து 25 இன்ச் தொலைவில் இருந்து கம்ப்யூட்டரை இயக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
 
மேலும் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரத்துக்கு ஒருமுறை ஐந்து அல்லது பத்து நிமிடம் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் கம்ப்யூட்டரை தொடர்ச்சியாக பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிடுகிறது. 
 
கம்ப்யூட்டரை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது என்றாலும் அதனை முறையாக பயன்படுத்தினால் நமது பணியையும் செய்து கொள்ளலாம் கண்களையும் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Mahendran